Varany Central College

சிறப்புத்தேர்ச்சி சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு

ஒவ்வொரு தவணையும் தவணைப்பரீட்சை நிறைவடைந்த பின்னர் இடம்பெறும் தேர்ச்சி அறிக்கை வழங்கப்படும் நிகழ்வில் குறித்த தவணையில் வகுப்பு ரீதியாக அதிஉயர் சராசரிப்புள்ளி பெறும் மாணவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள். இந்நிகழ்விற்கான பூரண அனுசரணையை கல்லூரியின் 2007O/L & 2010A/L பழையமாணவர் அணியினர் 2023 ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணை பரீ்ட்சை நிறைவுற்று அதற்கான தேர்ச்சி அறிக்கை வழங்கும் நிகழ்வு 20.01.2025 கல்லூரியின் பிரதி அதிபர் தலைமையில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் தவணைக்கான சிறப்பு தேர்ச்சி சாதனையாளர்களும் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.இந்நிகழ்வானது மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை தூண்டியுள்ளதை அவதானிக்கமுடிகின்றது ஏனெனில் சில வகுப்புக்களில் ஒவ்வொரு தவணையிலும் இவ்விருதை வெவ்வேறு மாணவர்கள் தமதாக்கிக்கொள்கிறார்கள். அந்த வகையில் அவ் அணியினருக்கு கல்லூரி சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *